மாரியம்மன் கோயில் முளைப்பாரி விழா
சத்திரப்பட்டி : சத்திரப்பட்டியில் நேற்று நடந்த மாரியம்மன் கோயில் ஆடிமுளைப்பாரி விழாவில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். விழாவை முன்னிட்டு பேண்டேஜ் நிறுவனங்கள் ஐந்துநாள்கள் விடுமுறை அளித்தன. சத்திரப்பட்டி, சமுசிகாபுரம் மற்றும் அய்யனாபுரம் பகுதிகளில் பேண்டேஜ் நிறுவன கூலிதொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். ஆடி இறுதியில் சத்திரப்பட்டி புதுத்தெரு, வடக்கு தெரு, நடுத்தெருக்களில் உள்ள மாரியம்மன் கோயில்கள் மற்றும் சமுசிகாபுரம் மாரியம்மன் கோயில்களின் முன் முளைப்பாரி வளர்ப்பர். ஒரு வாரம் கழித்து, அந்தந்த தெரு முளைப்பாரியுடன் பெண்கள் ஊர்வலமாக சென்று, நத்தம்பட்டி மெயின்ரோடு துரைமட கிணற்றில் கரைப்பது வழக்கம். நேற்று மாலை 3 மணிக்கு சத்திரப்பட்டியில் துவங்கிய முளைப்பாரி ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். விழாவை முன்னிட்டு, பேண்டேஜ் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், விசைத்தறி கூட தொழிலாளர்களுக்கு ஐந்துநாள் விடுமுறை அளித்தன. விழா, ஏற்பாடுகளை மூன்றுஊர் நாட்டாண்மைகள், கமிட்டி உறுப்பினர்கள் செய்து இருந்தனர். அசோகன் டி.எஸ்.பி., தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் என 142 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.