உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை

மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை

மயிலம்: மயிலம்  முருகன் கோவிலில் கிருத்திகையை  சிறப்பு வழிபாடுகள்   நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் கோவிலில் ÷ நற்று  ஆவணி மாத  கிருத்திகையை   முன்னிட்டு  அதிகாலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. காலை 11  மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள பாலசித்தர், வினாயகர் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு  நறுமணப் பொருட்களினால் சிறப்பு அ பிஷேகம் நடந்தது.  12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு மகாதீபாராதனை நடந்தது. மூலவர் தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். பிற்பகல்  ஒரு மணிக்கு கோவில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கினர்.  பக்தர்கள் கோவில் வளாகத்தில்  அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்தி கடனைச்  செலுத்தினர். இரவு 9 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள்  செய் திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !