அங்காள அம்மன் கோவிலில் ஆடி திருவிழா!
திருத்தணி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று, ஆடித்திருவிழாவை முன்னிட்டு கூழ்வார்த்தல், அம்மன் திருவீதியுலா நடந்தது. திருத்தணி, பழைய பஜார் தெருவில் அமைந்துள்ளது அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். இக்கோவிலில், நேற்று, ஆடித்திருவிழாவை முன்னிட்டு, காலை 7:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு, கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலையில், பெண்கள், பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இரவு 8:00 மணிக்கு, கும்பம் கெ?ட்டும் நிகழ்ச்சியும், இரவு 11:00 மணிக்கு, அமாவாசை ஊஞ்சல் சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர். முன்னதாக, இரவு 7:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.