பிரிவிடையாம்பட்டு கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4046 days ago
ரிஷிவந்தியம்: பிரிவிடையாம்பட்டு விநாயகர், கெங்கையம்மன், பாலசுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ரிஷிவந்தியம் அடுத்த பிரிவிடையாம்பட்டு கிராமத்தில் உள்ள விநாயகர், கெங்கையம்மன், செல்லி யம்மன், பாலசுப்ரமணியர் ஆலயங்கள் புதுப்பித்து கடந்த 6ம் தேதி காலை விக்னேஷ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இரவு 9 மணியளவில் முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. 7ம் தேதி காலை இரண்டாம் கால பூஜைகள் மாலை 6 மணியளவில் மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 6 மணியளவில் நான்காம் கால பூஜைகள் நடந்தது. 10 மணியளவில் கும்பாபிஷேகம் நட்தது. விழா ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் செ#திருந்தனர். சுற்று வட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.