ராமானுஜ பஜனை மடம் கோவிலில் புரட்டாசி திருவிழா
ADDED :4153 days ago
புதுச்சேரி: சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடம் கோவில் சார்பில், ௧௦ம் ஆண்டு புரட்டாசி திருவிழா நடக்கிறது. இதையொட்டி, புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான, வரும் செப்.20ம் தேதி, புரட்டாசி திருவிழாவாக, திருமால் கருட சேவை வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி, காலை 7.00 மணிக்கு திருமாலுக்கு திருமஞ்சனம், மாலை 6.00 மணிக்கு வீதியுலா நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை, சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடம் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.