உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தங்கி சேவையில் வீரராகவ பெருமாள்!

முத்தங்கி சேவையில் வீரராகவ பெருமாள்!

திருவள்ளூர் : திருவள்ளூர், வீரராகவ பெருமாள், நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, முத்தங்கி சேவையில் அருள்பாலித்தார். திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவிலில், நவராத்திரி உற்சவம், கடந்த 25ம் தேதி துவங்கியது. தினசரி, உற்சவர் வீரராகவர் மற்றும் கனகவல்லி தாயாருக்கு, மதியம் 2:00 மணிக்கு, திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு, பத்தி உலா நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, வீரராகவ பெருமாள், கனகவல்லி தாயாருடன், தினமும், வெவ்வேறு அலங்காரத்தில், உள்புறப்பாடு வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.நேற்று முன்தினம், தாயாருடன் உற்சவர் வீரராகவ பெருமாள், முத்தங்கி சேவையில் அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !