உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மனுக்கு கலச வேள்வி

திரவுபதியம்மனுக்கு கலச வேள்வி

ஆர்.கே.பேட்டை : ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி, அ.தி.மு.க.,வினர், நேற்று யாகசாலை அமைத்து, கலச வேள்வி நடத்தினர். ஆர்.கே.பேட்டை அடுத்த, பாலாபுரம் திரவுபதிஅம்மன் கோவிலில், நேற்று, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி, அக்கட்சியினர் கலச வேள்வி நடத்தினர்.காலை 10:30 மணிக்கு, கோவில் முன்பாக யாக வேள்வி நடத்தப்பட்டது. பின், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.இந்த சிறப்பு பூஜையில், முன்னாள் அரசு கொறடா நரசிம்மன், மாவட்ட பால்வள தலைவர் சந்திரன், முன்னாள் தலைவர் ஆனந்தன் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !