மணவாள மாமுனிகள் உற்சவம் பூர்த்தி விழா!
ADDED :4000 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புண்டரீகவள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் மண வாள மாமுனிகள் உற்சவம் நிறைவு விழா நடந்தது. காலையில் பெருமாள், தாயார், உபயநாச்சியார் உற்சவமூர்த்திகளுக்கு அலங்கார திருமஞ்சனம் செய்து கோவில் உள்பி ரகாரம் வலம் சென்றது. மாலையில் பெருமாள் மண்டபத்தில் எழுந்தருள செய்து, மணவாள மாமுனிகள் மற்றும் ஆழ்வார்களுக்கும், உற்சவ மூ ர்த்திகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பெருமாள், தாயாருக்கு சாற்றுமுறை, சேவை, ஆராதனம் நடத்தி, விஷ்ணு சகஸ்ரநாம மந்திரங்களை வாசி த்து அர்ச்சனை செய்தனர். தேசிக பட்டர் வழிபாட்டினை செய்து வைத்தார்.