சாந்தகாளி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :3995 days ago
விழுப்புரம்: சிறுவந்தாடு மோட்சகுளம் கிராமத்தில் அமைந்துள்ள சாந்தகாளி கோவிலில் ஜெ., மீண்டும் முதல்வராக வேண்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. சாந்திகாளி சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., துணை செயலாளர் தாட்கோ கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் 501 தேங்காய் உடைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். பேரவை முன்னாள் செயலாளர் பாலசுந்தரம், மருத்துவ அணி தலைவர் கலைசெல்வம், துணை தலைவர் தம்பிதுரை, அண்ணா தொழிற்சங்க தலைவர் நாகராஜன், கவுன்சிலர் அழகுநாதன், ஊராட்சி செயலாளர் அரிராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.