சங்கிலிகுப்பத்தில் தீமிதி விழா!
ADDED :3996 days ago
அவலூர்பேட்டை:அவலூர்பேட்டை அருகே மொகரம் பண்டிகையை முன்னிட்டு தீமிதி விழா நடந்தது.மேல்மலையனூர் ஒன்றியம் சங்கிலிகுப்பம் கிராமத்தில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன் தினம் இரவு தீ மிதி விழா நடந்தது. முன்னதாக கோலாட்டம், சிலம்பாட்டம் நடந்தது.அதிகாலையில் சந்தன கூடு ஊர்வலமாக வந்தது. இப்பகுதி கிராம மக்கள் மற்றும் முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.