பத்தாம் நூற்றாண்டு கோயில்!
ADDED :4166 days ago
ஈரோடு மாவட்டம், விஜய மங்கலத்தில் சமண மதத்தைக் காலூன்றச் செய்த 24 தீர்த்தங்கரர்களில் ஒருவரான ஸ்ரீசந்திரபிரப தீர்த்தங்கரர் கோயில் உள்ளது. கொடூம்பாளூர் இருக்கு வேளிர் கலை நுணுக்க முறையிலே கட்டப்பட்ட மிகப்பெரிய இக்கோயிலில் பத்தாம் நூற்றாண்டு ஓவியங்கள் உள்ளன. எம்மதத்தவரும் போற்றும் பழைமையான தமிழ் இலக்கண நூலான நன்னூல் இயற்றிய பவனந்தி முனிவர் சிலை இங்குள்ளது. அவரை ஆதரித்த சீயங்கன் சிலை, பெருங்கதை பாடிய கொங்கு வேளிர் சிலை ஆகியவையும் உள்ளன.