உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

மரக்காணம்: அனுமந்தை அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மரக்காணம் ஒன்றியம் அனுமந்தை அங்காளம்மன் கோவிலில் அமாவாசை விழா நடந்தது. காலை 7 மணிக்கு விநாயகர், முருகன், நவகிரகங்கள், அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு அங்காளம்மன் அலங்கரிக்கப்பட்டு கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் நடந்தது . இரவு 8 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். காலை 11 மணியளவில் அங்காளம்மன் ஊஞ்சலில் அலங்கரித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 12 மணிக்கு தீச்சட்டிஏந்தினர். கோவில் தர்மகர்த்தா சின்னசாமி, ஊராட்சி தலைவர் கலைவாணி ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் சத்தியா ரவிவர்மன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !