சிவலோகநாதர் கோவிலில் இன்று திருவாதிரை வழிபாடு!
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிவலோகநாதருக்கும், நந்திக்கும் ஒரே நேரத்தில் பால், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம், அரிசி மாவு, திருநீறு போனறவைகளால் அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து, சிவலோகநாதர், சிவலோகநாயகி, நந்திக்கு பூக்களால் அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பின், சிவலோகநாத உற்சவ மூர்த்தி, நந்தி வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல், கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், காசிவிஸ்வநாதருக்கும், பெரிய களந்தை ஆதிஸ்வரன், தேவனம்பாளையம் அமணலிங்கேஸ்வரர், அரசம்பாளையம் திருநீலகண்டர், கிணத்துக்கடவு எஸ்.என்.எம்.பி., நகர் சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு வெகுவிமர்சையாக நடந்தது.இன்று சிவலோகநாதர் கோவிலில், திருவாதிரையை ஒட்டி நடராஜர் சிலைக்கு சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை செய்து, ஆருத்ரா தரிசனம் காண்பிக்கப்படுகிறது.