உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்!

மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்!

வால்பாறை : வாழைத்தோட்டம் மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.வால்பாறை வாழைத்தோட்டம் எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவிலின் 31ம் ஆண்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, காலை 5.00 மணிக்கு கணபதிஹோமமும், 6.00 மணிக்கு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. காலை 7.30 மணிக்கு தாசில்தார் நேரு திருக்கொடியை ஏற்றினார்.விழாவில் வரும் 24ம்தேதி காலை 11.00 மணிக்கு திருக்கல்யாணமும், 12.00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழாவும் நடக்கிறது. வரும் 25ம் தேதி மாலை 6.00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், சிம்மவாகனத்தில் அம்மன் எருந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் வெள்ளைசாமி, செயலாளர் செல்வம், பொருளாளர், துணைத்தலைவர், துணை செயலாளர் உட்பட பலர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !