சக்கரத்தாழ்வார் கோவிலில் 30ம் தேதி திருக்கல்யாணம்!
ADDED :3914 days ago
கடலூர்: கடலூர் அடுத்த அரிசிபெரியாங்குப்பம் சக்கரத்தாழ்வார் கோவிலில் வரும் 30ம் தேதி அரசுவேம்பு மரத்திற்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதனை முன்னிட்டு அன்று காலை 9:00 மணிக்கு ஹோமம் துவங்குகிறது. பகல் 12:00 மணிக்கு அரசு வேம்பு மரத்திற்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. மூலவர் சக்கரத்தாழ்வார், விஜயவள்ளி தாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கின்றனர். ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், கிராம வாசிகள் செய்து வருகின்றனர்.