சிவன்மலை ஆண்டவருக்கு வரும் பிப்., 2ல் தீர்த்தக்காவடி!
ADDED :4066 days ago
காங்கயம் : நத்தக்காடையூர் சிவன்மலை ஆண்டவர் தீர்த்தக்காவடி குழு சார்பில், காவடி பூஜை விழா, வரும் 2ல் துவங்குகிறது. பிப்., 3ல், காவிரியில் தீர்த்தம் முத்தரித்து, அங்கிருந்து புறப்பட்டு, நத்தகாடையூரை அடைகின்றனர்.இரவு, காங்கயம் சிவன்மலை அடி வாரத்தில் தங்குகின்றனர். வரும் 4ல், மலைக்குச் சென்று சிவன்மலை ஆண்டவருக்கு, இக்குழுவினர் தீர்த்த பூஜை செய்கின்றனர்.