கன்னிமார் கோவிலில் மண்டலாபிஷேகம்!
ADDED :3916 days ago
செஞ்சி: பெரும்புகை கன்னிமார் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது. செஞ்சி தாலுகா பெரும்புகை கன்னிமார் கோவிலில் கடந்த டிச. 11ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு தினமும் அபிஷேக, ஆராதனைகள் செய்தனர். நேற்று மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. இதில் சிறப்பு ஹோமம் செய்து, கன்னிமார் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர்.