உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபத்ர கோவிலில் வண்ணார்குல மைலார் திருவிழா பெண்கள் வழிபாடு!

வீரபத்ர கோவிலில் வண்ணார்குல மைலார் திருவிழா பெண்கள் வழிபாடு!

திருத்தணி: வீரபத்ர சுவாமி கோவிலில், நேற்று நடந்த, வண்ணார்குல மைலார் திருவிழாவில், திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

திருத்தணி, சலவைத் தொழிலாளர்களின் குலதெய்வமான, வீரபத்ர சுவாமி கோவிலில், வண்ணார்குல மைலார் திருவிழா, நேற்று நடந்தது. சங்க தலைவர் குப்பன்ராஜ் தலைமையில், நேற்று காலை 10:30 மணிக்கு, 100க்கும் மேற்பட்ட பெண்கள், பொங்கல் கூடைகளை தலையில் சுமந்துவாறு, திருத்தணி பெரிய தெரு மண்டபத்தில் இருந்து, முக்கிய வீதிகள் வழியாக, ஊர்வலமாக, அனுமந்தாபுரம் வண்ணார்குட்டைக்கு வந்தனர்.அங்கு, பெண்கள் பொங்கல் வைத்து, மூலவர் வீரபத்ர சுவாமிக்கு படைத்து, தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிபட்டனர். தொடர்ந்து, சலவை தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பொங்கல் உணவை சாப்பிட்டு, மாலை 5:00 மணிக்கு, தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !