வடசெட்டியந்தூரில் தை பூச விழா!
சங்கராபுரம் : வடசெட்டியந்தல் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில் தை பூச அன்னதான விழா நடந்தது.
விழாவிற்கு சிவஞான அடிகள் தலைமை தாங்கினார். வேல்முருகன், ஊராட்சி மன்ற தலைவர்
கார்த்திகேயன், துணை தலைவர் நாராயணன், கண்ணன், தனராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சன்மார்க்க சங்க தலைவர் ராமலிங்கம் வரவேற்றார்.வள்ளலார் மன்ற பூசகர் தமிழ்மணி அடிகள், வள்ளலார் மன்ற செயலாளர் நாராயணன், துணை தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகவல் படித்து உலக நலனிற்காக பிரார்த்திக்கப்பட்டது. பின்னர் பாண்டலம் சித்தாந்த ரத்தினம் பாபு சன்மார்க்க கொடி ஏற்றினார். தொடர்ந்து சிறப்பு ஜோதி தரிசனம் நடந்தது.பாண்டலம் நாட்டார் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சைவ சித்தாந்த பேராசிரியர் ஜம்புலிங்கம், ஆலத் தூர் சின்னதம்பி, தமிழ்படைப்பாளர் சங்க நிர்வாகிகள் செம்பியன், சிங்கார உதியன், தொழிலதிபர் சந்திரசேகர், தலைமை ஆசிரியர் பாண்டுரங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.