உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடந்தபட்டி மாரியம்மன் கோவில்வரும் 9ம் தேதி கும்பாபிஷேகம்!

கடந்தபட்டி மாரியம்மன் கோவில்வரும் 9ம் தேதி கும்பாபிஷேகம்!

ராசிபுரம்: கடந்தப்பட்டி மாரியம்மன் கோவிலில், வரும் 9ம் தேதி கும்பாபிஷேக விழா
நடக்கிறது.ராசிபுரம் அடுத்த, கடந்தப்பட்டியில் மகா கணபதி, மாரியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவில் திருப்பணி, மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில், வரும் 9ம் தேதி கும்பாபிஷேக விழா நடத்த விழாக்குழுவினர் முடிவு செய்தனர்.விழாவை முன்னிட்டு, 7ம் தேதி, இரவு, 12 மணிக்கு கிராம சாந்தியுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. 8ம் தேதி, அதிகாலை, 4.30 மணிக்கு கணபதி, நவக்கிரகம், மஹாலட்சுமி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து, கோபுரத்திற்கு தானியம் நிரப்புதல், காவிரி தீர்த்தம் கொண்டு வருதல், மாலை 6 மணிக்கு விநாயகர் பூஜை, புண்யாகவாசனை, வாஸ்துசாந்தி, அம்மன் யாகசாலைக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடந்தது.

அதை தொடர்ந்து, கண் திறப்பு, கோபுர கலசம் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்கிறது. 9ம் தேதி, அதிகாலை, 4.30 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி பூஜை, நாடிசந்தானம், கடம் புறப்பாடும், காலை, 7.30 மணிக்கு கோபுர கலசங்கள், மகா கணபதி, மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.தொடர்ந்து, சிறப்பு அலங்காரம், ஸ்வாமி தரிசனம் நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !