அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4018 days ago
கடம்பத்துார்: கடம்பத்துார், ஏகாத்தம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில், நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கடம்பத்துார் ஊராட்சிக்குட்பட்ட கசவநல்லாத்துாரில் உள்ளது ஏகாத்தம்மன் கோவில், இந்த கோவிலில், புதிதாக அமைக்கப்பட்ட அய்யப்பன் கோவிலில், நேற்று காலை, மகா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம், காலை 9:00 மணிக்கு, கணபதி
ஹோமம், லட்சுமி பூஜை, கோ பூஜை மற்றும் பூர்ணாஹூதியும் நடந்தது. அதன்பின், மாலை 4:00 மணிக்கு, வாஸ்து சாந்தியும், முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று, காலை 7:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், காலை 9:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி சங்கல்பமும், 10:00 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், மூலவர் அய்யப்பனுக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.