22ல் திருத்தணி முருகன் கோவிலில் மாசி பிரம்மோற்சவம் துவக்கம்
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா, வரும் 22ம் தேதி துவங்கி, அடுத்த மாதம் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும். 12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தினமும் ஒரு வாகனத்தில் காலை, மாலை என, இரு வேளைகளில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்த வகையில், இந்தாண்டின் பிரம்மோற்சவ விழா, வரும் 22ம் தேதி, விநாயகர் வீதியுலாவுடன் துவங்குகிறது. மறுநாள் காலை, 5:00- மணி முதல், 6:00 மணிக்குள் கொடியேற்றம். அடுத்த மாதம் 1ம் தேதி இரவு, தங்கத்தேர், 2ம் தேதி வள்ளி திருக்கல்யாண உற்சவம், 4ம் தேதி, கொடியிறக்கம், 5ம் தேதி சப்தாபரணம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
நிகழ்ச்சி நிரல்
தேதி நேரம் வாகனம்
பிப். 22 இரவு -விநாயகர் வீதியுலா
பிப். 23 அதிகாலை கொடியேற்றம் இரவு கேடய உலா
பிப்., 24 காலை வெள்ளி சூர்யபிரபை இரவு பூத வாகனம்
பிப்., 25 காலை சிம்ம வாகனம் இரவு ஆட்டுக்கிடாய் வாகனம்
பிப்., 26 காலை பல்லக்கு சேவை இரவு வெள்ளி நாக வாகனம்
பிப்., 27 காலை அன்ன வாகனம் இரவு வெள்ளிமயில் வாகனம்
பிப்., 28 மாலை புலி வாகனம் இரவு யானை வாகனம்
மார்ச் 1 இரவு தங்கத்தேர் மார்ச் 2 காலை யாளி வாகனம் மாலை பாரிவேட்டை இரவு வள்ளி திருக்கல்யாணம்
மார்ச் 3 காலை கேடய உலா மாலை கதம்பப்பொடி விழா இரவு ஆறுமுக சுவாமி உற்சவம்
மார்ச் 4 காலை தீர்த்தவாரி சண்முகசுவாமி உற்சவம் மாலை கேடயம், உற்சவர் அபிஷேகம் இரவு கொடி இறக்கம்
மார்ச் 5 மாலை சப்தாபரணம்.