உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரேணுகா அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக் கொள்ளை!

ரேணுகா அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக் கொள்ளை!

விழுப்புரம்: விழுப்புரம் ரேணுகா அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா நடந்தது. விழுப்புரம் கே.கே.,ரோடு  பகுதியில் அமைந்துள்ள  ரேணுகா அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா நடந்தது. நேற்று மதியம் 2:00 மணிய ளவில் ருத்ர பூமியில் மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது. தொடர்ந்து இரவு 7 மணியளவில் பூத வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. இன்று  மாலை அம்மனுக்கு மஞ்சள் நீர் விழாவும், புஷ்ப அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும் நடக்கிறது.  நாளை மதியம் ஏழைகளுக்கு  அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !