பெரிய குருநாத ஸ்வாமி கோவில் கட்டிட திருப்பணிகள் தீவிரம்
அந்தியூர்: அந்தியூர் அடுத்த வெள்ளிதிருப்பூர் அருகே புரவிபாளையம் பகுதியில், பெரிய குருநாத ஸ்வாமி கோவில், நூற்றாண்டுகள் பழமையானது.இங்கு, பெரிய குருநாத ஸ்வாமி, காமாட்சி அம்மன், பெருமாள்சுவாமி, வீரபத்திரர் சுவாமி போன்ற சுவாமிகள் அமைந்துள்ளன. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், இங்கு வந்து தங்கி இருந்து, வழிபாடுகள் செய்தால், முற்றிலும் குணமடைவர் என்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பு.மேலும் தீராத நோய், பில்லி, சூரியத்தால் பாதிக்கப்பட்டவர்கள், வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் சிறப்பு பூஜையில் பங்கேற்று, குருநாத ஸ்வாமியை வழிபட்டு, நிவாரணம் பெறுவர் .மாதம் தோறும் அமாவாசை அன்றும் சிறப்பு பூஜைகள் நடக்கும். தவிர, பங்குனி திருவிழா விமரிசையாக நடக்கும். இக்கோவிலில், கட்டிட திருப்பணிகள் கடந்த, ஆறு மாதத்துக்கு முன், பரம்பரை அறங்காவலர் சாந்தப்பன் தலைமையில் துவங்கி, திருப்பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. வரும், 2ம் தேதி காலை, 10 மணிக்கு மேல் புனருத்தாரன மகா புண்யார்சனை சம்ப்ரோஷண வைபவம் நடக்கிறது.