உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆழத்து விநாயகர் உற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு!

ஆழத்து விநாயகர் உற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு!

விருத்தாசலம்: விருத்தாசலம் ஆழத்து விநாயகர் கோவில் உற்சவம், மணிமுக்தாற்றில் தீர்த்தவாரியுடன் நிறைவடைந்தது. விருத்தாசலம் விரு த்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள ஆழத்து விநாயகருக்கு பத்து நாள் உற்சவம், கடந்த 13ம் தேதி துவங்கியது. தினசரி காலை விருத்தகிரீஸ்வரர், தாயார்,  விநாயகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 7:30 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 20ம் தேதி நால்வருடன் வீதியுலா, 21ம்  தேதி தேரோட்டம், நேற்று தீர்த்தவாரி நடந்தது. காலை 10:30 மணிக்கு மணிமுக்தாற்றில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து,  ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், தாயாருக்கு மகா தீபாராதனை, வீதியுலாவுடன் உற்சவம் நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !