உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாகசாலை பாலசுப்ரமணியருக்கு மார்ச் 2ல் திருக்கல்யாணம்!

பாகசாலை பாலசுப்ரமணியருக்கு மார்ச் 2ல் திருக்கல்யாணம்!

பாகசாலை: பாகசாலை பாலசுப்ரமணியர் கோவிலில், வரும் மார்ச் 2ம் தேதி, திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பேரம்பாக்கம் அடுத்துள்ள பாகசாலை  கிராமத்தில் உள்ளது பாலசுப்ரமணியர் கோவில். இந்தாண்டு மாசி பிரம்மோற்சவத்தையொட்டி, 20ம் தேதி, காலை 9:00 மணிக்கு, கற்பக விநாயகர்  சிறப்பு வழிபாடும், 21ம் தேதி, காலை 9:00 மணிக்கு, கிராம தேவதை வழிபாடும் நடந்தன. அதன்பின், 22ம் தேதி, மாலை 4:00 மணிக்கு, வாஸ்து  சாந்தி, அங்குரார்ப்பணம் மற்றும் பூர்வாங்க நிகழ்ச்சிகளும், இரவு 7:00 மணிக்கு கற்பக விநாயகர் வீதியுலாவும் நடந்தன. தொடர்ந்து, 10 நாட்களுக்கு  நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில், ஏழாம் திருவிழாவான வினையறுக்கும் வேல் பூஜை, வரும் மார்ச் 1ம் தேதியும், திருக்கல்யாணம், 2ம் தேதி  மாலை 6:00 மணிக்கும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மகம், வரும் 4ம் தேதி நடைபெறவுள்ளது. அன்று மாலை  தீர்த்தவாரியும், இரவு இந்திர விமானத்தில் வீதியுலாவும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !