திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்!
ADDED :3886 days ago
வேலுார்: திருவண்ணாமலையில், கிரிவலம் வர உகந்த நேரத்தை, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று, திருவண்ணாமலையில், அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு, கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது, பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனால், ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும், திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர். இந்த மாத பவுர்ணமி, நாளை 4ம் தேதி இரவு 10:21 மணிக்கு துவங்கி, நாளை மறுநாள் (5ம் தேதி) இரவு 12:26 மணிக்கு முடிகிறது. இந்நேரத்தில், பக்தர்கள் கிரிவலம் வரலாம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.