புரவி எடுப்பு திருவிழா!
ADDED :3929 days ago
மேலுார்:மேலுார் அருகே தனியாமங்கலத்தில் நந்தி பெருமாள் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
சிவராத்திரியை முன்னிட்டு 15 நாட்கள் எண்ணெய் தாளிதம் மற்றும் மாமிசம் சாப்பிடாமல் பக்தர்கள் கடும் விரதம் இருந்தனர். நேற்று மேலவளசை அருகே மன்றமலைப்பட்டியில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள தனியாமங்கலத்திற்கு குதிரைகளை (புரவி) சுமந்து சென்றனர். குழந்தை பாக்கியம் கேட்டு பெண்கள் பதுமைகளை சுமந்து சென்றனர்.