வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி உற்சவம்!
ADDED :3928 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டானேஸ்வர் கோவிலில் மாசிமக தீர்த்தவாரி நடந்தது. திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டா÷ னஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா கடந்த 10 நாட்களாக நடந்து வந்தது. நேற்று தீர்த்தவாரி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சிவன் உமாகவுரி சுவாமிகளான சோமாஸ் கந்தர் சிறப்பு அலங்காரத்துடன் தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளினர். திரிசூலத்தில் ரிஷபாவுடன் தென்பெண்ணையில் தீர்த்தவாரி நடந்தது. பக்தர்கள் தென்பெண்ணையில் புனித நீராடினர். தீர்த்தவாரி மண்டபத்தில் சோமாஸ் கந்தருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது.