உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கருட சேவை நிகழ்ச்சி!

லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கருட சேவை நிகழ்ச்சி!

விழுப்புரம்: பவுர்ணமியை யொட்டி சிறுவந்தாடு லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கருடசேவை விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த  5ம் தேதி காலை 11:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கு, ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து  மூலவர் புஷ்பம், துளசியால் அலங்கரிக்கபட்டு கனகவல்லி தாயாரோடு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  மாலை 6:00 மணிக்கு  உற்சவர் பெருமாளுக்கு கருட சேவை நடந்தது. ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !