ஷீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை!
ADDED :3867 days ago
வால்பாறை: வால்பாறையில் ஷீரடி சாய்பாபா துாவாரகாமாயி தியான மந்திரில் சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.வால்பாறை நகை கடை வீதியில், ஷீரடிசாய்பாபா துாவாரகாமாயி தியான மந்திர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது. இந்த கோவிலில், நாள் தோறும் காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. நேற்றுமுன்தினம் மாலை, 6:45 மணிக்கு நடைபெற்ற பூஜையில், பஜன் பாடல்களும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தன. ஒருங்கிணைப்பாளர் சாய்செல்வரத்தினம் தலைமையில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது.