புஷ்பவனேஸ்வரர் கோயிலில் பங்குனி விழா கொடியேற்றம்!
ADDED :4074 days ago
திருப்புவனம் : திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சவுந்தரநாயகியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. பாண்டிய நாட்டு திருத்தலங்களில் ஒன்றான திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் பத்து நாள் பங்குனி திருவிழா நடக்கும். தினமும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவர். விழாவின் முதல் நாளான நேற்று கொடியேற்றம் நடந்தது. சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. குமார், கண்ணன், செந்தில் பட்டர் ஆகியோர் பூஜைக்கான ஏற்பாட்டை செய்தனர். நேற்று முதல் நாளில் சுவாமி அம்பாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார்.