உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் கைலாசநாதர் கோவில் பிரமோற்சவ விழா துவக்கம்!

காரைக்கால் கைலாசநாதர் கோவில் பிரமோற்சவ விழா துவக்கம்!

காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காரைக்கால் பாரதியார்  சாலையில் <உள்ள கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா நேற்று பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக தீபாரதனை முடிந்து ரிஷப கொடி  ஏற்றப்பட்டது. பின்,விநாயகர்,சுப்ரமணியர்,கயிலாசநாதர்,சுந்தராம்பாள், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர் புறப்பாடு நடந்தது. பின் நவசந்தி,யாக பூ ஜை தீபாரதனை நடந்தது.இன்று 26ம் தேதி பஞ்சமூர்த்திகள் அபிஷேகம் முடிந்து விநாயகர் மூஷிக வாகனத்திலும், சுப்ரமணியர் மயில் வாகனத்திலு ம், கயிலாசநாதர் சூரிய பிரபை, சுந்தராம்பாள் காமதேனு வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷபவாகனத்தில் வீதி உலா நடக்கிறது.வரும் 31ம் தேதி  திருக்கல்யாணம், ஏப்.2ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. ஏப்.5ம் தேதி தெப்ப திருவிழா நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில்  நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !