திருவெண்ணெய்நல்லூர் அய்யனார் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :3845 days ago
திருவெண்ணெய்நல்லூர்:
திருவெண்ணெய்நல்லூர் அருகே அய்யனார் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம்
நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அரசூர் பூரணி, பொற்கலை சமேத அய்யனார்
மற்றும் வீரன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 24ம் தேதி
காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. வாஸ்து
சாந்தி, பிரவேச பலி, மிருத்சங்கிராகணம் நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு
பூர்ணாஹூதியும், காலை 10:00 மணிக்கு கடம் புறப்பாடாகி கும்பாபிஷேகமும்
நடந்தது.