திருப்பரங்குன்றம் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு பின் குடை சுருட்டி!
ADDED :4043 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருவிழா காலங்களில் சுவாமிக்கு முன் குடை சுருட்டிகளை ஆட்கள் துாக்கி வருவர். இதற்கு பதில் பக்தர் ஒருவர் ரூ.ஒரு லட்சத்தில் புதிய குடை சுருட்டி வாகனத்தை அன்பளிப்பாக வழங்கினார். 50 ஆண்டுகளுக்கு பின் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியில் நேற்று குடை சுருட்டி வாகனம் கொண்டு செல்லப்பட்டது.