திருப்பரங்குன்றம் ஏடு திருவிழா!
ADDED :3841 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 8ம் நாள்
திருவிழாவாக சிவகாமி அம்பாளுக்கு நடராஜர் ஏடு கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.விடையாத்தி சப்பரங்களில் நடராஜர், சிவகாமி அம்பாள் தனித்தனியாக புறப்பாடாகி, வீதி உலா நிகழ்ச்சி முடிந்து, கோயில் திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினர். தீபாராதனைகள் முடிந்து நடராஜர் கரத்தில் இருந்த ஏடுகளை, சிவாச்சாரியார்கள் பெற்று, சிவகாமி அம்பாளிடம் சேர்ப்பித்தனர்.