உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை பெருமாள் கோயில் பங்குனி திருவிழா துவங்கியது!

வடமதுரை பெருமாள் கோயில் பங்குனி திருவிழா துவங்கியது!

வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் பங்குனி திருவிழா நேற்று துவங்கியது.ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் வடமதுரை பெருமாள் சுவாமி திண்டுக்கல் நகர் பகுதிக்கு சென்று நூற்றுக்கணக்கான திருக்கண்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நடப்பாண்டு திருவிழாவிற்காக நேற்று காலை சுவாமி பல்லக்கில் திண்டுக்கல் நோக்கி புறப்பட்டார். இரவு முள்ளிப்பாடியில் தங்கி, இன்று காலை 8.30 மணியளவில் முள்ளிப்பாடி சந்தனவர்த்தினி ஆற்றில் இறங்கி ராமதேவ மகரிஷிக்கு வரமளிப்பார். இன்று மாலை துவங்கி ஏப்.10 இரவு வரை திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் குதிரை, கருட, புஷ்ப பல்லக்குகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஏப்.11 ம் தேதி வடமதுரை கோயில் சன்னதிக்கு பெருமாள் திரும்புவார். ஏற்பாட்டினை கோயில் செயல்அலுவலர் வேலுச்சாமி, தக்கார் வேல்முருகன் மற்றும் விழா குழுவினர் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !