அவலூர்பேட்டை கோவிலில் ரூ. 2.55 லட்சம் உண்டியல் வசூல்
ADDED :3852 days ago
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் 2.55 லட்சம் ரூபாய் உண்டியல் வசூல் கிடைத்தது. மேல்மலையனூர் ஒன்றியம் அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் பங்குனி <உத்திர விழா நடந்தது. விழாவின்போது சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேர்த்திக்கட னாக கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தினர். கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. அறநிலைய துறை ஆய்வாளர் கோவிந்தராஜ், செயல் அலுவலர் ஜெயக்குமார் , விழா குழு தலைவர் அண்ணாமலை, ஊராட்சி மன்ற தலைவர் கலாராஜவேலாயுதம் மற்றும் விழா குழுவினர் முன்னிலை வகித்தனர். இதில், இரண்டு லட்சத்து 55 ஆயிரத்து 522 ரூபாய் பணம் மற்றும் 100 கிராம் வெள்ளி நகைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.