வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக பூர்த்தி விழா
ADDED :3995 days ago
துறையூர்: துறையூர் அருகே உள்ள எரகுடி பூமி நீளா ஸமேத வரதராஜ பெருமாள் கோவிலில், 4ம் ஆண்டு கும்பாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. விழாவையொட்டி, வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை செய்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. விசேஷ அலங்காரத்தில் பெருமாள் சேவை சாதித்தார்.