உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி செல்வவிநாயகர் கோவிலில் லட்ச தீப திருவிழா!

செஞ்சி செல்வவிநாயகர் கோவிலில் லட்ச தீப திருவிழா!

செஞ்சி: செஞ்சி செல்வவிநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு லட்ச தீப விழா நடந்தது. செஞ்சி பெரியகரம் செல்வ விநாயகர் ÷ காவிலில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் லட்ச தீப விழா நடந்தது. இதை முன்னிட்டு செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்,  பஞ்சலோக கவச அலங்காரம் நடந்தது. மாலை 6 மணிக்கு லட்ச தீபம் ஏற்றுதலும், சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடந்தது. இதில் 10 ஆயி ரத்திற்கும் அதிமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 10 மணிக்கு வாண வேடிக்கையுடன் சாமி வீதி உலாவும், இன்னிசை கச்சேரியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !