மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மழை வேண்டி கூட்டு வழிபாடு
ADDED :3870 days ago
தேவகோட்டை: தேவகோட்டை சண்முகநாதபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், தர்மரட்சண சமிதி சார்பில் கூட்டு வழிபாடு நடந்தது. உலக அமைதி,ஒற்றுமை, மழைவளம், வேண்டி நடந்த வழிபாட்டை சுந்தரேச குருக்கள், ராமு நடத்தினர். காரியக்காரர் ராஜேந்திரன் முன்னிலையில், விநாயகர், சிவ பெருமானுக்கு கும்ப மற்றும் விளக்கு பூஜைகளை சிவசுப்பிரமணியக்குருக்கள் நடத்தினார்.