புதுச்சேரி அங்காளம்மன் கோவிலில் தீச்சட்டி ஊர்வலம்!
ADDED :3924 days ago
புதுச்சேரி: முருங்கப்பாக்கம் அங்காளம்மன் கோவிலில் சித்திரை அமாவாசை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு தீச்சட்டி ஊர்வலம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், தீச்சட்டி ஏந்தி, கோவிலை வலம் வந்து, மகா தீபம் ஏற்றினர். சபாநாயகர் சபாபதி மற்றும் ஊர் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முருங்கப்பாக்கம் மற் றும் சுற்றுப்புற பகுதி மக் கள் கலந்து கொண்டனர்.