ராகுகால வழிபாட்டின் பலன்!
ADDED :3855 days ago
எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றித்தருவது ராகுகால துர்கா பூஜையாகும். ராகு காலத்தில் துர்காதேவியை ராகுபகவான்வழிபடுவதால் அந்த நேரத்தில் நாம் செய்யும் வழிபாடும் விசேஷமானது. எண்ணியபடி செயல்கள் நடைபெற, தீராத நோய் தீர,சஞ்சலங்கள் அகல, மனக்கஷ்டங்கள் நீங்க, எதிரிகளின் கொட்டம் அடங்க அருள்புரிபவள் துர்காதேவி. இந்நேரத்தில் துர்க்கைக்கு நெய் விளக்கேற்றினால் மனம் கனிந்து அருள்வாள். ராகு திசை, புத்தி நடப்பவர்கள் ராகுகால துர்காதேவி வழிபாட்டினால் பலன் பெறலாம்.