உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிவரதராஜப்பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்!

கரிவரதராஜப்பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், 39வது ஆண்டு பிரமோத்ஸவ விழாவையொட்டி, முக்கிய நிகழ்வான தேரோட்டம் 3.5.2015ல் நடக்கிறது.

பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், 39வது ஆண்டு பிரமோத்ஸவ விழா நேற்றுமுன்தினம் மாலை, 5:00 மணிக்கு அனுக்ஞை, விச்வக்சேன ஆராதனம், புண்யாக வாஜனம், வாஸ்து சாந்தி, கருட பிரதிஷ்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன், கடந்த 24ம் தேதி விழா துவங்கியது. தொடர்ந்து, 25ம் தேதி காலை, 10:30 மணிக்கு மேல், 11:30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சியும்; மாலை, 5:00 மணிக்கு புண்யாக வாஜனம், ரட்சாபந்தனம், யாக சாலை துவக்கம், மாலை, 6:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் ராஜ அலங்காரத்துடன் திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, காலை மற்றும் மாலை நேரங்களில், பெருமாள், தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, நேற்று காலை, 9:00 மணிக்கு திருபல்லக்கில் மோகினி அலங்காரத்தில் திருவீதி உலாவும்; மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. தொடர்ந்து, இன்று காலை, 9:00 மணிக்கு தவழ்ந்த கிருஷ்ணன் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் பெருமாள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சியும்; மாலை, 6:00 மணிக்கு குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது.

தொடர்ந்து 3.5.15 காலை, 10:30 மணிக்கு மேல் 12:00 மணிக்குள் தேரில் ஏளப்பண்ணுதல், வடம்பிடித்தல், மாலை, 6:00 மணிக்கு திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சியும்; 4ம் தேதி காலை, 6:00 மணிக்கு தீர்த்த வாரி நிகழ்ச்சியும், மாலை, 3:30 மணிக்கு துவாதச ஆராதனம், கண்டருலுதல், மாலை, 6:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு திருவீதியுலா நிகழ்ச்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !