முத்துமாரியம்மன் தேரில் அருள்பாலிப்பு!
ADDED :3809 days ago
சிறுபாக்கம்: காஞ்சிராங்குளம் முத்துமாரி அம்மன் தேரில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். சிறுபாக்கம் அடுத்த காஞ்சிராங்குளம் முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த 3ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 2:30 மணியளவில் அலங்கரித்த தேரில், முத்துமாரியம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான கிராம மக்கள், தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.