உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் தேரில் அருள்பாலிப்பு!

முத்துமாரியம்மன் தேரில் அருள்பாலிப்பு!

சிறுபாக்கம்: காஞ்சிராங்குளம் முத்துமாரி அம்மன் தேரில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். சிறுபாக்கம் அடுத்த காஞ்சிராங்குளம் முத்து மாரியம்மன்  கோவில் தேர் திருவிழா, கடந்த 3ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை  நடந்தது.  பகல் 2:30 மணியளவில் அலங்கரித்த தேரில், முத்துமாரியம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான கிராம மக்கள், தேரை வடம்  பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !