கடவுளிடம் வேண்டியது பணிவா? பயமா?
ADDED :3889 days ago
பயபக்தி என்றே சொல்வார்கள். கடவுள் தண்டிப்பவர் என்ற எண்ணத்தால், பக்தி முதலில் பயத்துடன் தொடங்கும். ஆனால், மனம் பக்குவம் பெற்ற பின், எல்லாம் அவன் செயல் என்ற எண்ணம் உண்டாகும். அப்போது பயம் பணிவாக மாறி விடும். இதை திருவள்ளுவர், கற்றதனால் ஆய பயனென் கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் என்று குறிப்பிடுகிறார்.