உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூசை செய்யும் காலமும் நாழிகையும்!

பூசை செய்யும் காலமும் நாழிகையும்!

உதயமுதல் மூன்றைந்து கடிகையா மந்தமட்
டுயர்கால சந்தி பூசைக்கு
உத்தமமொ டிடையதம மென்றுரைத் தனைமறைகள்
உயர்பனிரு கடிகை யளவில்
விதியினுச் சிப்பொழுதில் நற்சபரி புரிதரவு
மேவுசா யங்கா லையின்
மிக்கபிர தோடகா வந்தனில் பூசைசெய்
விதியெனவும் அர்த்த சாமத்து
அதினுரிய பூசையீ ரைந்துநா ழிகையளவும்
ஆற்றமுறை யெனவு மன்றி
அபிடேக பூசனைய காலத்தில் ஆற்றுபயன்
அசுரர்கைக் கொள்வர் என்றாய்
சிதவிடையின் உமையொடா கரவென்று கார்முனிவர்
சேவிக்க வருப ரமனே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !