செங்கழுநீரம்மன் கோவிலில் பால் குட ஊர்வலம்!
ADDED :3791 days ago
புதுச்சேரி; மழை வேண்டி, சஞ்சீவிநகர் செங்கழுநீரம்மன் கோவிலில் பால் குட ஊர்வலம் நடந்தது. லக நன்மை வேண்டியும், மழை வர வேண்டியும் சஞ்சீவி நகர் செங்கழுநீரம்மன் கோவிலில் பால் அபிஷேகம் நடந்தது. குளக்கரையில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் இருந்து செங்கழுநீரம்மன் கோவிலுக்கு 108 பால் குட ஊர்வலம் நடந்தது. அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது.