மாதா நவநாள் திருவிழா!
ADDED :3839 days ago
வத்தலக்குண்டு: மேலக்கோயில் பட்டியில் மாதா நவநாளை முன்னிட்டு பெண்கள் மின் அலங்கார சப்பரத்துடன் வீதி உலா வந்தனர். மேலக்கோயி ல்பட்டி தோமையார் சர்ச்சில் மே மாதம் முழுவதும் மாதா நவநாள் அனுசரிக்கப்பட்டது. நாள்தோறும் ஜெபம், திருப்பலிகள் நடந்தது. இறுதி நாளான நேற்று முன் தினம் வத்தலக்குண்டு தோமையார் சர்ச் உதவி பாதிரியார் பிரான்சிஸ் சேவியர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. மாதா சிலை மின் அலங்கார சப்பரத்தை பெண்கள் தூக்கிக் கொண்டு வீதி உலா வந்தனர். சிறப்பு பூஜைகள் நடந்தன. பெண்கள் சப்பரம் எடுப்பதற்கான காரணம் குறித்து கிராமத்தினர் கூறுகையில், அனைவரும் திருவிழாவில் பங்கேற்க வேண்டும். அனைத்து பொறுப்புகளை ஆண், பெண் பகிர்ந்து கொள்ள
வேண்டும் என்பதற்காக பெண்களும் சப்பரம் சுமக்கிறோம் என்றனர்.