உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென்பசியார் எல்லை பிடாரியம்மன் கோவில் திருவிழா!

தென்பசியார் எல்லை பிடாரியம்மன் கோவில் திருவிழா!

மயிலம்: தென்பசியார் எல்லை பிடாரியம்மன் கோவில் திருவிழா  நடந்தது. தென்பசியார் கிராம எல்லையிலுள்ள பிடாரியம்மன் கோவில் திருவிழா  நடந்தது.  நேற்று காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. தென்பசியார் குளக்கரையிலிருந்து பூங்கரகத்தை பக்தர்கள்  முக்கிய வீதிகள் வழியாக எடுத்து சென்றனர். காலை 11:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.  மதியம் 1:00 மணிக்கு கோவில் வளாகத்தில் சாகை  வார்தல் நடந்தது. கிராம பெண்கள் ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் செய்தனர். இரவு 8:00 மணிக்கு மின் விளக்குகளினால்  அலங்கரித்து, உற்சவர் வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !